யுவராஜ் சிங் 2000 ஆம் ஆண்டில் கிரிக்கெட்டில் நுழைத்தார்,பிறகு அவர் அணைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி தன் திறமைகளை வெளிப்படுத்தி அனைவரிடமும் பாராட்டுகளை பெற்றார். உலக கோப்பை போட்டிகள் என்று பார்த்தால் 2007 மற்றும் 2011ஆம் ஆண்டு இந்திய அணி கோப்பையை வெண்றதுக்கு யுவராஜ் சிங் ஒரு முக்கிய காரணமாக இருந்தார்.இந்த உலக கோப்பையில் அவரின் பங்கு மிக பெரியது என்றே கூறலாம்.
பிறகு 2011ஆம் ஆண்டிற்கு பிறகு யுவராஜ் சிங் வாழ்க்கையில் மிக பெரிய கஷ்டத்தை அடைந்தார்.2011 உலக கோப்பை போட்டிகளுக்கு பிறகு அவர் புற்று நோயால் அவதி பட்டார். அதற்க்கு பிறகு அவர் கிரிக்கெட் போட்டிகளில் சரியாக விளையாட வில்லை என்று தான் கூற வேண்டும்.
தற்போது நடை பெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் சேரி நடந்து முடிந்த சாம்பியன் ட்ரோபி போட்டிகளிலும் சேரி அவர் சரியாகவே விளையாட வில்லை இதனால் இந்த இடத்தை மற்ற வீரர்களுக்கு வழங்கலாம் என நினைக்கின்றோம்.
இந்த வாய்ப்பை ஐந்து சிறந்த வீரர்களுக்கு வழங்கலாம் அவர்கள் யார் யார் என்று பாருங்கள் :
சுரேஷ் ரெய்னா :
சுரேஷ் ரெய்னா இந்திய அணியில் ஒரு மிக சிறந்த வீரர் ஆனால் இவர் கடந்த இரண்டு காலமாக அணியில் இடம் பெறவில்லை. 2015 உலகக் கோப்பைக்குப் பிறகு, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவின் தொடர்ச்சியான தொடரைத் தொடர்ந்து ரெய்னா இடம் பெறவில்லை.
பொதுவாக ரெய்னா டி20 போட்டிகளில் சற்று அதிகமாகவே அடித்து விளையாடுவார் கடந்த ஐபிஎல் போட்டிகளில் கூட சிறப்பாக விளையாடினர் ஆனால் ரெய்னாவை எந்த தொடரிலும் சேர்க்காதது சற்று வருத்தமாகவே உள்ளது.
யுவராஜ் சிங் தற்போது அணியில் சரியாக விளையாட வில்லை எனவே அந்த இடத்தில ரெய்னாவிற்கு வாய்ப்பு தரலாம் என நினைக்கின்றோம்.
தினேஷ் கார்த்திக் :
தமிழ் நாட்டு வீரரான தினேஷ் கார்த்திக் பேட்டிங் விக்கெட் கீப்பிங் என இரண்டிலும் அசத்துவார் ஆனால் இவருக்கு இன்னும் இந்திய அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவே இல்லை. இந்த ஐபிஎல் போட்டியில் இவர் மற்ற ஆட்டத்தை விட சிறப்பாகவே விளையாடினார்.
இதனால் இவருக்கு சாம்பியன் ட்ரோபி போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது ஆனால் அணிக்குள் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. சாம்பியன் ட்ரோபி பயிற்சி ஆட்டத்தில் கூட தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடினார்.
ஆனால் அணியில் விளையாட தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு கிடைக்கவே இல்லை.இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் விளையாட இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
எனவே யுவராஜ் சிங் தற்போது அணியில் சரியாக விளையாட வில்லை எனவே அந்த இடத்தில தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு தரலாம் என நினைக்கின்றோம்.
மனிஷ் பாண்டே :
மனிஷ் பாண்டே ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார் இவர் ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணியில் விளையாடி வருகிறார் இவர் எப்போது ஐபிஎல் போட்டிகளில் இடம் பெறுவார் அந்த அணியில் நட்சத்திர வீரர்களில் மனிஷ் பாண்டேவும் ஒருவர் ஆவர்.
ஆனால் இவருக்கும் அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவே இல்லை இவர் இந்திய அணியில் இடம் பெற்று பல வருடங்கள் ஆகி விட்டது.இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் இவர் அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிட்ட தக்கது.
எனவே யுவராஜ் சிங் தற்போது அணியில் சரியாக விளையாட வில்லை எனவே அந்த இடத்தில மனிஷ் பாண்டேவிற்கு வாய்ப்பு தரலாம் என நினைக்கின்றோம்.
ரிஷாப் பண்ட் :
இளம் வயதான ரிஷாப் ஐபிஎல் போட்டிகளில் மிகவும் அதிரடியாக விளையாடுவதை பார்த்து அணைத்து வீரர்களும் பாராட்டியுள்ளார்கள் அதிலும் ராகுல் டிராவிட் இவரை மிகவும் பாராட்டியுள்ளார் ஏன்னெனில் இவர் டிராவிட் பயிற்சியில் இருந்து வந்த வீரராவார்.
இவர் தற்போது நடை பெற்று கொண்டு இருக்கும் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம் பெற்று உள்ளார் ஆனால் இவருக்கு அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை,இவரை அணியில் விளையாட அனைவரும் விரும்புகிறார்கள் ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை.
எனவே யுவராஜ் சிங் தற்போது அணியில் சரியாக விளையாட வில்லை எனவே அந்த இடத்தில ரிஷாப் பண்டிற்கு வாய்ப்பு தரலாம் என நினைக்கின்றோம்.
கே.ல் ராகுல் :
கே.ல் ராகுல் தற்போது இந்திய அணியில் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார் அது மட்டும் இல்லாமல் இவர் இந்தியா அணியில் ஒருநாள் போட்டியிலும் விளையாடி உள்ளார். இவர் தோள்பட்டை காரணமாக அணியில் இடம் பெறாமல் போனார் ஆனால் இப்பொழுது காயம் குணம் அடைந்த நிலையில் இவர் தற்போது அணியில் விளையாட விரும்புகிறார்.
யுவராஜ் சிங் தற்போது அணியில் சரியாக விளையாட வில்லை எனவே அந்த இடத்தில ராகுலை விளையாட வாய்ப்பு தரலாம் என நினைக்கின்றோம்.