விராட் கோலி வந்தாலும் எங்களுக்கு பிரச்சனை இல்ல… நாங்க ரெடி தான்; கெத்தாக பேசிய இங்கிலாந்து பயிற்சியாளர்

விராட் கோலி இந்திய அணிக்கு திரும்பினாலும் அதனால் இங்கிலாந்து அணிக்கு எவ்வித நெருக்கடியும் ஏற்படாது என இங்கிலாந்து அணியின் பயிற்சியாளரான பிராண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

விராட் கோலி வந்தாலும் எங்களுக்கு பிரச்சனை இல்ல... நாங்க ரெடி தான்; கெத்தாக பேசிய இங்கிலாந்து பயிற்சியாளர் !! 1

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரில் சமநிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி 15ம் தேதி துவங்க உள்ளது.

கடைசி மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி அடுத்த இரு தினங்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத கே.எல் ராகுல், தனிப்பட்ட காரணங்கள் காரணமாக முதல் இரண்டு போட்டியிலும் விளையாடாத விராட் கோலியும், மீண்டும் அணிக்கு திரும்பிவிட்டால் இந்திய அணியில் நிலவி வரும் பேட்டிங் பிரச்சனை சரியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விராட் கோலி இந்திய அணிக்கு திரும்பினாலும் அதனால் இங்கிலாந்து அணிக்கு எவ்வித நெருக்கடியும் ஏற்படாது என இங்கிலாந்து அணியின் பயிற்சியாளரான மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி வந்தாலும் எங்களுக்கு பிரச்சனை இல்ல... நாங்க ரெடி தான்; கெத்தாக பேசிய இங்கிலாந்து பயிற்சியாளர் !! 2

இது குறித்து மெக்கல்லம் பேசுகையில், “நான் பார்த்த தலைசிறந்த வீரர்களில் விராட் கோலியும் ஒருவர், இதில் எந்த சந்தேகமும் இல்லை. விராட் கோலி அணிக்கு திரும்புவதன் மூலம் இந்திய அணிக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என்பது உண்மை தான். ஆனால் விராட் கோலி அணிக்கு திரும்புவதால் எங்களுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை, விராட் கோலிக்கு எதிரான சவாலையும் சந்திக்க நாங்கள் ஆவலுடன் காத்துள்ளோம். விராட் கோலி மிக சிறந்த போட்டியாளர், அவரை எனக்கு நன்றாக தெரியும், அவரது பேட்டிங் ஸ்டைலை போன்று அவருக்காக எதிராக விளையாடுவதும் எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *