அடுத்து வரும் ரஞ்சி கோப்பை தொடருக்காக காத்திருக்கிறார் இர்பான் பதான், அதே நேரத்தில் அவரை பேட்டி எடுக்கும் போது ஹர்டிக் பாண்டியாவின் திடீர் ஏற்றத்தை பற்றியும் கூறினார்.
தற்போது இருக்கும் இளம் வீரர்களுக்கு கேப்டன் மற்றும் பிசிசிஐ, பல வாய்ப்புகளை சந்தோசமாக இருக்கிறது என இந்திய அணியின் நட்சத்திர வீரர் இர்பான் பதான் தெரிவித்தார். ஆனால், அதே வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை என அவர் வருந்தினார்.
“வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பதை பார்க்க நன்றாக இருக்கிறது. இது போல் சில வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்திருந்தால், அவர்களுக்கு கிரிக்கெட் வாழ்க்கை பெரியதாக இருந்திருக்கும்,” என இர்பான் பதான் கூறினார்.
உள்ளூர் போட்டிகளில் ஹர்டிக் பாண்டியா மற்றும் கேதார் ஜாதவ் ஆகியோர் சிறப்பாக செயல் பட்டதால், அவர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கிறார்கள்.
“ஒரு வீரரின் முன்னேற்றத்திற்கு அந்த அணியின் கேப்டன் தான் முக்கிய காரணம். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல் பட்டிருக்கும் கேதார் ஜாதவுக்கு தற்போது பல வாய்ப்புகள் கிடைக்கிறது. ஆனால் அவருக்கு விராட் கோலி தான் வாய்ப்பு கொடுக்கிறார்,” என பதான் மேலும் கூறினார்.
ஒருவர் இருவர் அல்ல, அனைத்து இளம் வீரர்களுக்கும் விராட் கோலி வாய்ப்பு கொடுக்கிறார். அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தால், சிறப்பாக விளையாடுவார்கள். சில வருடங்களுக்கு முன்பு தோனி வாய்ப்பு கொடுத்த பிறகு ரோஹித் ஷர்மாவுக்கு அதே தான் நடந்தது என தெரிவித்தார்.
“ஒருவர் இருவர் அல்ல, அனைத்து இளம் வீரர்களுக்கும் விராட் கோலி வாய்ப்பு கொடுக்கிறார். அவர்களுக்கு மீண்டும் அணியின் கேப்டன் வாய்ப்பு கொடுத்தால், அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். சில வருடங்களுக்கு பிறகு ரோகித் ஷர்மாவுக்கு பல வாய்ப்புகளை தொடர்ந்து கொடுத்தார் தோனி. இப்போது, ரோகித் சர்மா சிறந்த வீரர்களில் ஒருவர்,” என கூறினார் பதான்.
“எந்த வீரரோடும் ஹர்டிக் பாண்டியாவை ஒப்பிட்டு பேசாதீர்கள். அவருக்கு சில நாட்கள் தேவை. அவருக்கு பிரஷர் கொடுக்காதீர்கள், அவர் ப்ரீயாக விளையாடட்டும்,” என இர்பான் பதான் மேலும் தெரிவித்தார்.