சாம்பியன்ஸ் கோயப்பைத் தொடரில் இருந்து இந்திய அணி அடுத்தடுத்து தொடர்களில் விளையாடி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஆஸ்திரேலியா தற்போது நியூசிலாந்து என அடுத்தடுத்து ஓய்வில்லாமல் கிரிக்கெட் விளையாடி வருகிறது இந்திய அணி.
இலங்கயுடனான் 3 டெஸ்ட் 5 ஒருநாள் 3 டி20 பின்னர் ஆஸ்திரேலிய அணியுடன் 5 ஒருநாள் மற்றும் 3 டி30 தற்போது நியூசிலாந்துடன் 3 ஒருநாள் மற்றும்3 டி20 போட்டிகள் அடுத்து இலங்கை அணி இந்தியா வரவுள்ளது அப்போது 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் முடிவடைந்த உடனடியாக தென்னாப்பிரிக்க அணியுடனான முழு அளவிளான தொடருக்கு தென்னாப்பிரிக்கா பயணம் செய்கிறது இந்திய அணி.
தென்னாப்பிரிக்க பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது, இந்திய அணி கிட்டத்தட்ட 6 மாதங்கள் இந்தியாவின் வெற்றிகரமாக தொடர்களை வெற்றி பெற்று பின்னர் ஜனவர் 5ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கு அங்கு செல்கிறது. அங்கு 3 டெஸ்ட் போட்டிகள் 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்திய அணி களம் காண்கிறது.
தொடர்ந்து இந்தியாவில் தனது ஆதிக்கத்தை செலுத்தி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் முதல் இடத்தைப் பிடிக்கும் இந்திய அணி வெளிநாடுகளில் என்ன செய்யப்போகிறது என்பதைக் காண உலக கிரிக்கெட் அணிகள் உற்று நோக்க்கியுள்ளது.
மேலும், தொடர்ந்து இவ்வாறு ஆடும் இந்திய அணிக்கு அவ்வப்போது ஓய்வு தேவை. பந்து வீச்சாளர்களை சுழற்சி முறையில் ஆட வைக்கிறது இந்திய அணி. மேலும், ஒரு தோனி போ ரகானே போன்ற ஒரு சில வீரர்கள் ஒரு சில ஃபார்மட் மட்டுமே ஆடுகின்றனர். ஆனால், கோலி மற்றும் பாண்டியா போன்ற (தவான் விடுப்பு எடுத்துள்ளார்) வீரர்கள் ஓய்வில்லாமல் அடுத்தடுத்து மூவிதமான போட்டிகளிலும் ஆடி வருகின்றனர்.
இதன் காரணமாக கோலிக்கு ஓய்வு தேவை என பல்வேறு ஊடகங்களிலும் சமூக வலை தளங்களிலும் விவாதங்கள் நடைபெற்றது. கடந்த ஆஸ்திரேலியத் தொடர் துவங்கும் முன் நிரூபர்கள் கோலியிடம் சிறு ஓய்வு பற்றி கேட்ட போது, “எனக்கு ஏன் ஓய்வு தேவைப்படுகிறது? நான் தற்போது ஓய்வு எடுக்க வேண்டும் என நீங்கள் எப்படி தீர்மாணிக்கிறீர்கள்? இந்த வதந்திகள் எல்லாம் எங்கிருந்து வருகின்றது என எனக்கு தெரியவில்லை” என நிரூபர்களிடம் கடிந்து கொண்டார்.
தற்போதும் இலங்கையுடனான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கு கோலி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என கூறப்பட்டது.
இது பற்றி இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மற்றும் தற்போதைய இந்திய அண்டர்-19 அணியின் பயிற்சியாளர் ராகுல் ட்ராவி கூறியதாவது,
அவருக்கு ஓய்வு வேண்டுமானால் அவர் கேட்டு பெற்றுக்கொள்வார், மேலும் இப்படி கேட்பது ஒரு தேவையிள்ளாத ஒரு சர்ச்சைக் கேள்வியாகும். எல்லோருக்கும் தான் ஓய்வு தேவைப்படுகிறது. சுழற்சி முறையில் வீரர்கள்ளுக்கு வாய்ப்பளித்தால் போதும். அணி நிர்வாகம் அதற்கான வேலைகளை செய்கிறது.
எனக் கூறினார் ராகுல் ட்ராவிட்.