தப்பு என் மேல தான்... பெருந்தன்மையுடன் தனது தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ரவீந்திர ஜடேஜா !! 1
தப்பு என் மேல தான்… பெருந்தன்மையுடன் தனது தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ரவீந்திர ஜடேஜா

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தனது தவறால் சர்பராஸ் கான் ரன் அவுட்டானதற்கு ரவீந்திர ஜடேஜா வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் (10), சுப்மன் கில் (0) மற்றும் ராஜத் படித்தர் (5) ஆகியோர் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தாலும், இந்திய அணியின் துவக்க வீரரும், கேப்டனுமான ரோஹித் சர்மா பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 131 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

தப்பு என் மேல தான்... பெருந்தன்மையுடன் தனது தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ரவீந்திர ஜடேஜா !! 2

ரோஹித் சர்மா விக்கெட்டை இழந்தபிறகு களத்திற்கு வந்த அறிமுக வீரரான சர்பராஸ் கான், ரவீந்திர ஜடேஜாவுடன் கூட்டணி சேர்ந்து பயமே இல்லாத தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

பல வருட போராட்டத்திற்கு பிறகு இந்திய அணியில் கால் பதித்த சர்பராஸ் கான் 48 பந்துகளில் 50 ரன்கள் கடந்து அசத்தினார். சர்பராஸ் கான் இந்த போட்டியில் சதமும் அடிக்க வேண்டும் என ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் விரும்பிய நிலையில், 62 ரன்கள் எடுத்த போது, ஜடேஜாவின் தவறால் சர்பராஸ் கான் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

ஜடேஜாவின் தவறால் சர்பராஸ் கான் தேவையே இல்லாமல் விக்கெட்டை இழந்தது ரோஹித் சர்மா உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதை போன்றே, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

தப்பு என் மேல தான்... பெருந்தன்மையுடன் தனது தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ரவீந்திர ஜடேஜா !! 3

விளையாட்டில் இது போன்று நடப்பது சாதரணம் தான் என்றாலும், பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் ஜடேஜா தனது சுயநலத்திற்காக சர்பராஸ் கானை அவுட்டாக்கிவிட்டதாக சமூக வலைதளங்கள் மூலம் தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்தி வரும் நிலையில், தற்போது ஜடேஜாவே தனது தவறை பகிரங்கமாக ஒப்புக்கொண்டு அதற்கு வருத்தமும் தெரிவித்துள்ளார்.

தப்பு என் மேல தான்... பெருந்தன்மையுடன் தனது தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ரவீந்திர ஜடேஜா !! 4

இது குறித்து ரவீந்திர ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “சர்பராஸ் கானை நினைத்து வருகிறேன். என்னுடைய தவறால் தான் சர்பராஸ் கான் விக்கெட்டை இழந்தார்” என பெருந்தன்மையுடன் பதிவிட்டுள்ளார்.

ரவீந்திர ஜடேஜாவின் இந்த இன்ஸ்டா பதிவு சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி, ஜடேஜா மீதான நன்மதிப்பை அதிகரித்துள்ளது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *