ரிஷப் பண்ட் ரீ எண்ட்ரீ... டெல்லி அணிக்கு எதிராக முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது பஞ்சாப் கிங்ஸ் !! 1
ரிஷப் பண்ட் ரீ எண்ட்ரீ… டெல்லி அணிக்கு எதிராக முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது பஞ்சாப் கிங்ஸ்

ஐபிஎல் டி.20 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

17வது ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

பஞ்சாப்பின் முல்லான்பூர் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் அணியின் கேப்டனான ஷிகர் தவான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டிக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆடும் லெவனில் மிட்செல் மார்ஸ், ஸ்டப்ஸ், டேவிட் வார்னர் மற்றும் சாய் ஹோப் ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாக இடம்பெற்றுள்ளனர். ரிஷப் பண்ட் ரீ எண்ட்ரீ கொடுத்துள்ளார்.

அதே போன்று ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியில் லியம் லிவிங்ஸ்டன், ஜானி பாரிஸ்டோ, சாம் கர்ரான் மற்றும் ரபாடா ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாக இடம்பெற்றுள்ளனர்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆடும் லெவன்;

டேவிட் வார்னர், மிட்செல் மார்ஸ், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட், ரிக்கி போய், ஸ்டப்ஸ், அக்‌ஷர் பட்டேல், சுமித் குமார், குல்தீப் யாதவ், கலீல் அஹமத், இஷாந்த் சர்மா.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆடும் லெவன்;

ஷிகர் தவான், ஜானி பாரிஸ்டோ, சாம் கர்ரான், லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் சர்மா, ஷாசன்க் சிங், ஹர்ப்ரீத் பிரார், ஹர்சல் பட்டேல், காகிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஸ்தீப் சிங்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *