முதல் ஆளாக ஏலத்திற்கு வந்த அதிரடி நாயகன் ரோவ்மன் பவல்... 7 கோடி கொடுத்து தட்டி தூக்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் !! 1
முதல் ஆளாக ஏலத்திற்கு வந்த அதிரடி நாயகன் ரோவ்மன் பவல்… 7 கோடி கொடுத்து தட்டி தூக்கியது ராஜஸ்தான் ராயல்ஸ்

வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேனான ரோவ்மன் பவலை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாத இறுதியில் துவங்க உள்ளது.

அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் இன்று நடைபெற்று வருகிறது. மொத்தம் 333 வீரர்கள் பங்கேற்றுள்ள இந்த ஏலத்தில் முதல் ஆளாக வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த ரோவ்மன் பவல் ஏலத்திற்கு வந்தார்.

கடந்த தொடர்களில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடிய ரோவ்மன் பவலை, மீண்டும் ஏலத்தில் எடுக்க டெல்லி அணி முனைப்பு காட்டியது. ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விட்டே கொடுக்காமல் தொடர்ந்து போராடியதால் இறுதியாக ரோவ்மன் பவலை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7.4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இதுவரை 17 போட்டிகளில் விளையாடியுள்ள ரோவ்மன் பவல் அதில் 257 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *